Tuesday 21st of May 2024 06:08:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா நகர் முடங்கியது!

வவுனியா நகர் முடங்கியது!


வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரனொ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டாணிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பட்டாணிசூர் பகுதி கடந்த ஒருவாரமாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபாரநிலையங்களை நடாத்திவருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்

அதனை கருத்தில் கொண்டு வவுனியா பசார்வீதியின் ஒருபகுதி,தர்மலிங்கம் வீதி,சந்தைவீதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் நேற்று முன்தினம் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று வெளியாகியது அவர்களில் 54 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் பசார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி என்பன சற்று முன்னர் முற்றாக முடக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதியாகியவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்


Category: செய்திகள், புதிது
Tags: வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE